/* */

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் வேண்டாம்

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

HIGHLIGHTS

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் வேண்டாம்
X

பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் பெருங்குடல் குறித்தான மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. சென்னை ஜெம் மருத்துவமனையும், இந்திய குடல் நோய் மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 200 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர்; தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம்களில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 11 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அளவில் இதுவரை 100 கோடி தடுப்பூசிகளும், தமிழகத்தில் 5 கோடிக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசிகள் பற்றி தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 24 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!