/* */

தமிழகத்தில் AY 4.2 கொரோனா வைரஸ் பரவலா?அமைச்சர் மா.சு.விளக்கம்

தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகில் உள்ள கண்ணகிநகர் எழில் நகரில் (துரைப்பாக்கம்), சென்னை குடிநீர் வாரியம் மூலம் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகத்தை, அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை போது டெங்கு உருவாக்கின்றது. இதனை தடுக்க, விழிப்புணர்வு பணிகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 320, பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதிதாக இந்த ஆண்டே 11மருத்துவ கல்லூரி மூலம் 1650 மருத்துவ இடங்களை, இந்த ஆண்டே ஒதுக்கீடு செய்ய மத்திய சுகாதார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. இங்கு டெல்டா வகை கோவிட் மட்டுமே தற்போது வரை கண்டறியப்பட்டு வருகிறது. என்றார்.

Updated On: 27 Oct 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை