/* */

நடிகர் விஜய் வீட்டில் போலீசார் இரவில் திடீர் சோதனை - காரணம் இதுதான்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

நடிகர் விஜய் வீட்டில் போலீசார் இரவில் திடீர் சோதனை - காரணம் இதுதான்!
X

 நடிகர் விஜய்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் வசித்து வரும் நடிகர் விஜய் வீட்டிற்கு, நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு துண்டித்தார்.
இது குறித்து, உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜயின் வீட்டை இரவில் போலீசார் சோதனையிட்டனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனிடையே, சைபர் கிரைம் போலீசார் மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணின் முகவரியை கண்டறிந்து நேரில் சென்று பார்த்த போது, மிரட்டல் விடுத்தவர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வர் என்று தெரிய வந்தது. அவர், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை எச்சரித்து, உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர்கள், நடிகர்கள்கள் என பலமுறை இதுபோல் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்