/* */

பம்மலில் 6 ஆடுகளை திருடிய மர்ம நபர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமிரா

பம்மலில் 6 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கேமிரா பதிவு மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், பல்லவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகர் சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 32) இவர் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்திவந்தார்.

இந்நிலையில் கடந்த 03.11.2021 அன்று வீட்டின் அருகில் இருந்த இரண்டு வெள்ளை ஆடுகளை காணவில்லை. அதேபோல் 06.11.2021. ஆம் தேதி காலை 10 மணியளவில் மழையின் காரணமாக தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 4 ஆடுகளையும் காணவில்லை. இவ்வாறு மர்மமான முறையில் காணாமல் போகும் தனது ஆடுகளை கண்டுபிடித்து தரகோரி பம்மல் சங்கநகர் காவல் நிலையத்தில் முரளி கிருஷ்ணன் புகார் மனு அளித்திருந்தார்.

புகாரின் பேரில் பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் உத்தரவின் பேரில் குற்றவியல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் தலைமை காவலர் திணேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் மனிகண்டன், தனபால் ஆகியோரை கொண்ட தனிபடை அமைத்து ஆடுகள காணாமல் போன இடங்களில் உள்ல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஆடுகளை திருடியது குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் 13 வது தெருவை சேர்ந்த டேவிட்வினோத் என தெரியவந்தது. மேலும் குற்றவாளியை கைது செய்து விசாரணைக்கு பினனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து