/* */

பல்லாவரம்: விதிகளை மீறி காற்றாடி விடும் இளைஞர்கள், கழுத்து அறுபடும் வாகன ஓட்டிகள்

இளைஞர்கள் மாஞ்சா நூல் போட்ட காற்றாடி விடுவதால், அறுந்து செல்லும் மாஞ்சா நூல் வாகன ஓட்டிகளின் கழுத்தை பதம் பார்க்கிறது

HIGHLIGHTS

பல்லாவரம்: விதிகளை மீறி காற்றாடி விடும் இளைஞர்கள், கழுத்து அறுபடும் வாகன ஓட்டிகள்
X

பல்லாவரம் மேம்பாலத்திற்கு கீழ் ரேடியல் சாலையில் அறுந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று கழுத்தை பதம் பார்த்தது

ஊரடங்கு காலத்தில் பொழுதை கழிப்பதற்காக சில இளைஞர்கள் காற்றாடி விடுகின்றனர். அதனை விட பயன்படுத்தும் நூலை மாஞ்சா போட்டு விடுவதால் அறுந்து செல்லும் காற்றாடியின் மாஞ்சா நூல் வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுத்து விடுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் வெங்கடஸ்வரன்(30) என்பவர் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் ஒட்டியம்பாக்கத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் மேம்பாலத்திற்கு கீழ் ரேடியல் சாலையில் அறுந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று வெங்கடேஸ்வரன் கழுத்தை பதம் பார்த்தது.

கழுத்து அறுபட்ட இளைஞர் வெங்கடேஸ்வரன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காற்றாடி விடும் நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!