/* */

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற இந்து திராவிட மக்கள் கட்சியினர்

குரோம்பேட்டையில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் எடுத்து சென்று குளத்தில் கரைத்த இந்து திராவிட மக்கள் கட்சியினர்

HIGHLIGHTS

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற இந்து திராவிட மக்கள் கட்சியினர்
X

விநாயகர் சிலைகளுடன் திருநீர்மலை கோயில் குளத்தில் இந்து திராவிட மக்கள் கட்சியினர் 

கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திவிழா இரண்டாவது ஆண்டாக, கொண்டாட தமிழக அரசு தடைவித்தித்துள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை நாகப்பா நகர் பகுதியில் இந்து திராவிட மக்கள் கட்சியின் நிறுவனர் ரமேஷ்பாபு தலைமையில் அவரது இல்லத்தில் விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பின்னர் விநாயகர் சிலைகள் பெரிய வாகனங்களில் வைக்க அனுமதி இல்லாததால், தடையை மீறி சிலைகளை கரைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து நாகப்பா நகரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள திருநீர்மலை கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் இந்து திராவிட மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அவர்களுடன் சென்றனர்.

Updated On: 13 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது