/* */

தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை

ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய் விடவா என திமுக கவுன்சிலர் காட்டம்.

HIGHLIGHTS

தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை
X

தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் மண்டல குழு கூட்டம் மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மண்டல குழு கூட்டத்தில் பேச ஆரம்பித்த திமுக மாமன்ற உறுப்பினர் நரேஷ் கண்ணா பேசும் போது ஒரு லைட் கூட மாற்ற முடியல, ஏன் அதை கூட வழங்கமுடியாதா, என்ன பாவம் செய்தது அனகாபுத்தூர் என புலம்பி தீர்த்து விட்டார்.

அதற்கு பதிலளித்த மண்டல பொறியாளர் மாநகராட்சி ஆணையர் கையெழுத்து போடவில்லை அதனால் தான் பல்பு வழங்கவில்லை என பதிலளித்தார்.

அதன் பிறகு பெண் மாமன்ற உறுப்பினர் பேசுகையில் 6 மாதமாக ஒரு லைட் போட கூட முடியாத நிலையில் உள்ளோம், 2006ல் மாற்றப்பட்ட லைட்டெல்லாம் இன்னும் மாற்றப்படவில்லை, பொதுமக்கள் போன் மேல் போன் போட்டு கேட்கிறார்கள் என்று அவர் பங்குக்கு புலம்பி தள்ளினார்.

மீண்டும் பேசிய நரேஷ் கண்ணா 48 கோடி நிதி வருதுன்னு சொன்னீங்க எதுவும் வரவில்லை, என்ன நடைமுறையை பின்பற்றுகிறீர்களோ, இந்த மண்டலத்திற்கு மட்டும் என்ன விதி என்று தெரியவில்லை, முதலில் ஒரு மூன்று மீட்டிங்கில் கமிஷ்னர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Updated On: 25 Aug 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!