குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
X
குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தாெற்று உறுதி செய்யப்பட்டது.

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 1600 விடுதி மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 60 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 141 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கல்லூரியில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு குறிப்பாக 90% நபர்களுக்கு ஒமிக்ரான் அறிகுறி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture