Begin typing your search above and press return to search.
பம்மலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
பம்மலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் கிருஷ்ணா நகர் சாலை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பம்மல் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பம்மல் பாலு, தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வை கட்டப்படுத்தாத பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.