/* */

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம்  செல்போன் பறிப்பு
X

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி கேமிரா பதிவு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேனி பிரதான சாலையில் செளந்தர்யா என்ற பெண் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சௌந்தர்யாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சௌந்தர்யா எழுந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். ஆனால் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.

உடனே இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துதப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 July 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  6. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  8. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  9. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  10. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...