பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்

விற்பனைக்காக வந்துள்ள செம்மறி ஆடுகள்.
செங்கல்பட்டு மாவட்டம், கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. யாமொய்தீன் என்பவர் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கிடாய் ஆடுகளை தரம் பிரித்து விற்று வருகிறார். ஆடுகளை இஸ்லாமிய சகோதரர்கள் குர்பானிக்காக வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து தொழிலதிபர் யாமொய்தீன் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இந்த ஆண்டு வியாபரம் நன்றாக உள்ளது ஆடுகளின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் விற்க்கபடுவதாகவும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் வாங்கி செல்கின்றனர்.
இங்கு செம்மறி ஆடு, வெள்ளாடு என அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு குர்பானிக்காக வாங்கி செல்வதாகவும். இவை ஆந்திரா, கர்நாடக, ராஜஸ்தான் மற்றும் உள்ளூர் பகுதிகளான சமயபுரம், திருச்சி கள்ளகுறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் , ஒரு வருடத்திற்கு மேலான ஆடுகளையே விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலை 10 ஆண்டுகாலமாக செய்து வருகிறோம் எனவும் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆடுகள் குர்பானிக்காக விற்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் சென்னை நகர பகுதிகளில் இருந்தும் வாங்கி செல்கின்றனர். ஆடுகளின் எடை 30 கிலோ முதல் 100 கிலோ எடை வரை இருக்கின்றன. அனைத்தும் பழுது இல்லாமல் தரமான ஆடுகள் எனவும் இதனை நாங்களே முன்னின்று குர்பானிக்காக சரிபார்த்து தருவதாக யாமொய்தீன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu