/* */

பல்லாவரம் அருகே வீட்டில் தீ விபத்து: 2 வயது குழந்தை பலி

பல்லாவரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பல்லாவரம் அருகே வீட்டில் தீ விபத்து: 2 வயது குழந்தை பலி
X

பிரிஜிதா

சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரை சேர்ந்தவர் சரசு (எ) சங்கீதா(25). இவர் இன்று மாலை தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டு இருந்துள்ளார். அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா, படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் திடீரென தீப்பிடித்துள்ளது.

தீப்பிடித்த உடன் உள்ளே சென்று குழந்தையை தூக்க தாய் முயன்றபோது தீ மளமளவென பரவியதால் குழந்தையை மீட்க முடியாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். தீயை அணைத்து குழந்தையை பார்த்தபோது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்து இருந்தது.

தகவல் அறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 26 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்