/* */

முதியவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்

பம்மல் நாகல்கேனி, ஆதாம் நகர் பகுதியில் முதியவரை மீட்டு, அவரது மகனிடம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

முதியவரை மீட்டு  மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்
X

ஆதாம் நகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட முதியவர்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் நாககேனி ஆதாம் நகர் பகுதியில், ஆதரவற்ற நிலையில் முதியவர் ஒருவர் படுத்திருபதாக, பம்மல் சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ராஜ்குமார், விரைந்து சென்று ஆதரவற்ற முதியவரை மீட்டு, குளிப்பாட்டி, புது ஆடைகள் கொடுத்து விசாரித்தார். அப்போது அவர் பெயர் முனுசாமி வயது 70 எனவும் குரோம்பேட்டை ராதாநகர், அகஸ்தியர் தெரு பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து, முதல் நிலை காவலரான அமரதாஸ், முதியவரின் மகனான சரவணனிடம் விசாரணை செய்தபோது, முதியவர் சற்று மனநலம் சரியில்லாததால் யாரிடமும் சொல்லாமல் வெளியே வந்ததாக தெரியவந்தது.

காவல் ஆய்வாளர் ராஜ்குமார், முதியவர் முனுசாமியை அவரது மகனிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி, நல்லமுறையில் அனுப்பி வைத்தனர். முதியவரை மீட்டு அவரின் மகனிடன் ஒப்படைத்த, பம்மல் சங்கநகர் காவல்துறையினரை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Updated On: 16 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...