/* */

சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர் போராட்டம்

முன்று தலைமுறையாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை துண்டித்ததைக் கண்டித்து ஏராளமான மக்கள் தொடர் போராட்டம்

HIGHLIGHTS

சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர் போராட்டம்
X

ஆலந்தூர் தொகுதியில் சாலை வசதி வேண்டி  மக்கள் சாலையில் அமர்ந்து இருளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நந்தம்பாக்கத்தில் கணபதி நகர், துளசி நகர், உக்ரித்கவுண்ட் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பத்திற்கு மேற்ப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மூன்று தலைமுறயாக 60 ஆண்டுகாலமாக அப்பகுயில் உள்ள சாலையை பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திடீரென முன் அறிவிப்பு இன்றி சாலையை துண்டித்ததால் அப்பகுதி மக்கள் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வர இயலாத நிலை உள்ளதாகவும், மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல இது முக்கிய சாலையாக பயன்படுத்துவதாகவும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், மயானம் செல்ல சாலை வேண்டும் எனவும் இந்த துண்டிக்கப்பட்ட சாலையை தமிழக அரசு உடனடியாக சீர் செய்து தரகோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் வரவில்லை :

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திடீரென முன்னறிவிப்புமின்றி சாலையை துண்டித்தால், அப்பகுதி மக்கள் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல இயலாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல பஸ்சில் ஏற முடியாத காரணத்தாலும், சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து ஆறு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் வராததால், பகுதி மக்கள் இருளில் அமர்ந்து செல்போன் வெளிச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Updated On: 27 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!