/* */

பல்லாவரம் அருகே 9 மாத குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழப்பு..!

சென்னையில், பல்லாவரம் அருகே பள்ளி ஆசிரியையின் 9 மாத பெண் குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பல்லாவரம் அருகே 9 மாத குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழப்பு..!
X

சென்னை பல்லாவரம் அருகே கழிவறை பக்கெட் தண்ணீரில் பெண் குழந்தை உயிரிழந்து கிடந்த பள்ளி.

சென்னை பல்லாவரம் தர்கா சாலை, கோபாலன் தெருவில் பிரீ ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியராக பணிபுரிபவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ (24). இவர், தனது 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ இத்திகாவை தன்னுடன் பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது மதியம் 12 மணியளவில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கழிவறைக்கு சென்று அங்கிருந்த தண்ணீர் பக்கெட்டிற்குள் விழுந்துள்ளது.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணாமல் தேடிப்பார்த்த போது கழிவறை பக்கெட்டில் மூச்சு பேச்சின்றி குழந்தை கிடப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுதொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த பல்லாவரம் காவல்துறையினர் குழந்தையின் உடலை, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழிவறை தண்ணீர் பக்கெட்டில் குழந்தை விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!