/* */

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்
X

பாலாற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம். 

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 1,04,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு, காஞ்சிபுரத்தில் பாலாறு வழியாக தடுப்பணைகள் நிரம்பி வழிந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்ககிறது. எதிர்பாராத வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அதிகாரிகள் படகுகளில் சென்று, பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலாற்று வெள்ளம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 1903 ஆம் ஆண்டுக்கு பிறகு, இப்போது தான் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 1903-இல் வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1,25,00 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது சற்று குறைவாக 1,04,000 கன அடி நீர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி பகுதியில் இருந்து கணக்கிடும் போது விநாடிக்கு 1,25,000கன அடிநீர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 20 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்
  7. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  8. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  9. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து