Begin typing your search above and press return to search.
தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது: சம்பவ இடத்தில் இருவர் பலி
தொடர் மழை காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இருவரும் இறந்தனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் வேதாசலம் (80) இவர் மனைவி செந்தாமரை (72) ஆகியோர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கடந்த வாரமாக பெய்த மழையின் காரணமாகவும் நேற்று இரவு இடியுடன் பெய்த கனமழை காரணமாகவும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் அருகில் உள்ள மகனுடைய மகள் பேத்தி தாத்தா பாட்டிக்கு காபி கொண்டுவந்து பார்க்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து தாத்தா பாட்டி இருவரும் பலியாகி உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வட்டாச்சியர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.