/* */

மதுராந்தகம்: கோழிப்பண்ணையில் 115 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

மதுராந்தகம் அருகே, கோழிப்பண்ணையில் தீவனத்துக்காக வைத்திருந்த 115 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

மதுராந்தகம்: கோழிப்பண்ணையில் 115 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
X

மாரிபுத்தூர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசி கொதிக்க வைத்து, கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கமாக செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு, ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், ஏ.டி.ஜி.பி பாஸ்குமார் உத்தரவின்பேரில் அங்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார், கோழி பண்ணையில் சோதனை செய்தனர்.

போலீசார் தேடப்பட்டு வரும் கோழிப்பண்ணை உரிமையாளர் அப்துல்சமத்.

இச்சோதனையில், கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5750 கிலோ அதாவது, 50 கிலோ எடை கொண்ட 115 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான, மதுராந்தகம் அப்துல்சமத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 7:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...