/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவஅணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவஅணிவகுப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் 452-டடாக் சி பட்டாலியன் கம்பெனி பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை கிருஷ்ணகோபால் தலைமையிலான 50 ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற ராணுவ ஒத்திகை நடத்தினர்.

இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா உத்தரவின் பேரில் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு ஒரத்தி பேருந்து நிலையம் எலப்பாக்கம் பேருந்து நிலையம் முதல் பிண்ணம்பூண்டி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் முக்கிய சாலையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் போது ஒரத்தி சப்இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்