100 சதவீதம் வாக்களிக்க கோரி மராத்தான்

100 சதவீதம் வாக்களிக்க கோரி மராத்தான்
X

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் ஓட்டம் நடந்தது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில் நடந்த போட்டியை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil