16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - மதுராந்தகத்தில் இளைஞர் கைது: 2 பேர் ஓட்டம்

16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை -  மதுராந்தகத்தில் இளைஞர் கைது: 2 பேர் ஓட்டம்
X

மதுராந்தகம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது. மாதிரிபடம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 16 வயது சிறுமியை முன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமைறவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 16 வயது சிறுமியை முன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமைறவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பேர்கண்டிகை பகுதி இருளர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் வயது (45) இவர் இதே பகுதியில் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். இவர் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே இருளர் பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது(25) சின்னராசு வயது(22) ஆகிய இருவரும் கடத்திச்சென்று அருகில் உள்ள புட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்களது நண்பரான பெரும்பேர் கண்டிகை ஊர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது(35) என்பவரையும் அழைத்து பின்னர் அச்சிறுமியை மிரட்டி அடித்து துன்புறுத்தி மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அச்சிறுமியை தங்களது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து மிரட்டி மூவரும் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விசாராணை மேற்கொண்ட போலீசார் பெரும்பேர்கண்டிகை ஊர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான விஜயகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த சூர்யா, சின்னராசு ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future