/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவை வரவேற்கும் சினிமா தியேட்டர்கள்

செங்கல்பட்டு மாவட்ட திரையரங்கம் 80 விழுக்காடு பார்வையாளர்களை முகக்கவசம் இல்லாமல் அனுமதித்து படங்கள் திரையிடப்படுகிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவை வரவேற்கும் சினிமா தியேட்டர்கள்
X

மாமண்டூர் அருகே உள்ள திரையரங்கில் முகக்கவசம் அணியாமல் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை ஏற்பட்டது. அப்போது நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன.அப்போது பல மாதங்கள் தியேட்டர்கள் மூடியே இருந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகே நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் மீண்டும் கொரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2ஆம் அலையின் சமயத்தில் வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. அதன் காரணமாக மாநிலத்தில் உள்ள திரையரங்ககுளை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பும் மெல்லக் கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலையை வரவேற்கும் வகையில் மாமண்டூரில் உள்ள ஒரு திரையரங்கம் 80 விழுக்காடு பார்வையாளர்களை முகக்கவசம் இல்லாமல் அனுமதித்து படங்கள் திரையிடப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா 3 வது அலை வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற திரையரங்குகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டு என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 2 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!