/* */

மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில், பழமை வாய்ந்த எல்லையம்மாள் கோவில் உள்ளது. நேற்று இரவு மா்ம நபா்கள், இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனா்.

இன்று காலை வழக்கம் போல், கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி சுப்பராயன், கோயிலின் பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கிராம மக்கள் ஒன்று சோ்ந்து மதுராந்தகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தகவலில் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 April 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்