அச்சிறுப்பாக்கம்: அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஆணைக்கிணங்க அச்சிறுப்பாக்கம் பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் டி.சுரேஷ் மரகதம்குமரவேலுவை வரவேற்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இதில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம், இராவத்தநல்லூர், மேட்டுகாலனி, வடக்குமாட வீதி, தெற்குமாட வீதி, லூப்ரோடு, வடக்கு நகர், எம்ஜிஆர் நகர், கஸ்தூரி நகர், வண்டிகுப்பம் காலனி, காந்தி நகர், நேரு நகர், பெரியார் நகர், வரதாரெட்டி காலனி, ஓம்சக்தி நகர், ஜிஎஸ்டி சாலை, ஒத்தவாடை தெரு, உள்ளிட்ட 15 வார்டுகளில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் தோழமை கட்சியான தமிழ் மாநில காங்கிரஸார் வேட்பாளருடன் ஆரம்பம் முதல் கடைசி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் துணைத்தலைவர் ஜெகநாதன் உட்பட தொண்டர்கள் கார்த்திக் சதீஷ், சக்தி, சூர்யா, பிரசாந்த், ஜகா, மேஷாக், பிரதாப், மன்னா, அரசு, ராமதாஸ், உட்படநிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu