/* */

மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை

சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக 15 குடிசை வீடுகள் தீக்கிரையானது.

HIGHLIGHTS

மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை
X

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள கலைஞர் நகரில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அப்பகுதியின் கடையில் உபயோகத்திலிருந்த சிலிண்டரிலிருந்து மதியம் 1.30 மணி அளவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியது. இந்த தீ அருகிலுள்ள அடுத்தடுத்த குடிசை வீடுகளில் தீ பற்றியது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தால் வீடுகளில் இருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நகை பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உரிய நேரத்திற்கு வராததே இந்த தீ விபத்துக்கு காரணம் என பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On: 24 April 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...