மதுராந்தகம் ஒன்றியம் 21 வது வார்டில் 3 முனைப் போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 21 வது வார்டில் 3 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 21 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ரேவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அன்பு செல்வம், சுயேட்சை வேட்பாளராக அம்பேஸ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 21 வது வார்டில், அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி