மதுராந்தகம் ஒன்றியம் 18 வது வார்டில் 5 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 18 வது வார்டில் 5 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுஜாதா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அன்பரசு, திமுக சார்பில் சுஜாதா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயராமன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருபாரகன், சுயேட்சை வேட்பாளராக அம்பேத்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 18 வது வார்டில், பாரதிய அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture