/* */

கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழா- பக்தர்கள் வழிபாடு

கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழா- பக்தர்கள் வழிபாடு
X

சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில், இன்று நடைபெற்ற, 23ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரித் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள். 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில், 23ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரித் திருவிழா, இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களில் இருந்து முக்கிய ஆலயங்களின் உற்சவர்கள், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் உற்சவர், கடலில் புனித நீராடப்பட்டது. ஸ்வாமி புனித நீராடிய கடல் நீரில் பக்தர்கள் புனித நீராடி, பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 16 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?