/* */

செங்கல்பட்டு அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
X

செங்கல்பட்டு அருகே காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கழுக்குன்றம் அருகே நேற்று மாலை காணாமல் போன சிறுமி, இன்று காலை மர்மமான முறையில் உடலில் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டார்.

இதற்கு காராணமன கொலையாளிகளை கைது செய்திட வலியுறுத்தி ஈ.சி.ஆர் சாலையில் சிறுமியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கணேசன் இவர் இதே பகுதியில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவருக்கு பதினோரு வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி சென்றுள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். அவர் எங்கும் கிடைக்காததால் சட்ராஸ் காவல்நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்தார்,

நேற்று மாலை முதல் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு சிறுமி மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரனையில் ஈடுபட்டார். அப்போது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் உரைந்த இரத்த படிவங்கள் இருப்பதாகவும், இது குறித்து மூன்று இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்திட வலியுறுத்தி சென்னை பாண்டிச்சேரி செல்லும் வெங்கப்பாக்கம் ஈசிஆர் சாலையில் சிறுமியின் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் களைந்துச்சென்றனர்.

Updated On: 30 Jun 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?