மதுராந்தகம்: கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பூசாரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள வால்மீகிநாதர் கோயில் வளாகத்தில் செய்யூர் தாலுகாவில் உள்ள, 52 கிராம கோயில்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாளை தமிழக கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை,10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோயில் ஆய்வாளர் தீனதயாளன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu