/* */

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி

ஆத்தூர் ஊராட்சி, நீலகண்டபுரம் ஏரி வழியாக விவசாயிகள் ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர் உறுதி
X

ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வா.கோபாலக்கண்ணன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, பூட்டுசாவி சின்னத்தில் ஆத்தூர் வா.கோபாலக்கண்ணன் போட்டியிடுகிறார். வரும் அக்டோபர் 9-ம் தேதி நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சேகரிக்க, ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நடுத்தெரு, பெருமாள்கோவில் தெரு, அக்ரகார தெரு, கிழக்குதெரு, பாதராகுல தெரு, அங்கன்வாடி தெரு, குலக்கரைதெரு, மேட்டுதெரு, உள்ளிட்ட பகுதியில், அவர் பிரசாரம் செய்தார்.

அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது, தன்னை வெற்றி பெறச்செய்தால், ஆத்தூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். நீலகண்டபுரம் ஏரி இடையே விவசாயிகள் ஈடுபொருள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறனர். அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

Updated On: 5 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்