ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர்தப்பினர்

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர்தப்பினர்
X
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர்தப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூரை சேர்ந்தவர் வெங்கடேசன், ஷேர் ஆட்டோ டிரைவர், இவர், திருப்போரூர்-திருக்கழுக்குன்றம் சாலையில், மானாமதி நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். ஆட்டோவில், இரண்டு பயணிகள் இருந்தனர், ஆட்டோ முந்திரிதோப்பு என்ற இடத்தில் சென்றபோது, அதே திசையில் நோக்கி சென்ற டாரஸ் லாரி ஆட்டோவை முந்தியபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது,

இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது, டிரைவர் வெங்கடேசன், பயணி வனித்தா மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர், இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த மானாமதி போலீசார் விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர், இந்த சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Next Story
ai in future agriculture