/* */

கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
X

செங்கல்பட்டு இராமபாளையம் பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் ஜித்து (எ) சித்தேஸ்வரன் இவர் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஆகாஷ்-19. இவர் கோயம்புத்தூரில் உள்ள இராமகிருஷ்ணா கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் உள்ள கிணற்றில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாததால் ஆகாஷ் நீரில் தத்தளித்தார்.‌ இதனைக் கண்ட சித்தேஷ்வரன் ஆகாஷை மீட்க சென்று, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆதுழ்த்தியுள்ளன.

Updated On: 19 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்