/* */

தொடரும் கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின.

HIGHLIGHTS

தொடரும் கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின
X

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 40 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல், 32 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 102 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 145 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 145 ஏரிகள் நிரம்பி உள்ளன. ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாக, பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  4. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...