/* */

பூவை மூர்த்தி நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செங்கல்பட்டில் பூவை மூர்த்தியின் 19வது நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பூவை மூர்த்தி நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினர்.

புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம். மூர்த்தியின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு, இராட்டிணகிணறு, ஒழலூர், நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சி கொடியேற்றியும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அக்கட்சியினர் வழங்கினர்.

அபே ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கே மூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான கபடி விளையாட்டுக்கள், மாணவ மாணவியருக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகளும் நற்ச்சான்றுகளும் வழங்கப்பட்டன.

மாநில துணை பொதுச் செயலாளர் விசு, மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் தீபன், செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் நாஜேந்திரபாபு, உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பூவை மூர்த்தியின் சிறப்புகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசினர். மேலும், ஏழுமலை, சக்தி, மணிபாரதி, முருகன், வீரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Sep 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...