தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு
X

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 6 மற்றும் 9ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆ. ராகுல்நாத் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future