/* */

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு : துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு துர்நாற்றத்தால் மக்கள் .தவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு : துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
X

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில்  கொட்டப்பட்டுள்ள இறைச்சிக்கழிவுகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேதிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, கோழி மற்றும் வாத்து இறைச்சி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.

இங்கிருந்து இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மேலும், நாய்களும் கூட்டமாக திரிகின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுமட்டுமல்லாது, வேதநாராயணபுரத்தில் இருந்து பழவேலி செல்லும் வழி போன்ற பகுதிகளில், கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கழிவு கொட்டப்படுவது குறைந்து இருக்கிறது. இருந்தபோதும் ஏற்கனவே கொட்டிய இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 21 Jun 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?