/* */

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

பாலாறு வெள்ளத்தால், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வள்ளிபுரம் இடையே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

HIGHLIGHTS

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
X

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம். 

செங்கல்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள வள்ளிபுரம் தடுப்பணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பாயும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதன் காரணமாக, திருக்கழுக்குன்றத்தில் இருந்து கருங்குழி வழியாக மதுராந்தகம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் இருந்து, அதன் பின் பக்கவாட்டில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஈசூர், பூதூர், பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்கள் வரை, சுமார் 3 கிமீ தூரத்துக்கு பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், பல கிலோமீட்டர் தொலைவு சுற்றுச் சென்று, அங்குள்ள மேம்பாலத்தின் வழியாக மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இதனிடையே, ஈசூர் - வள்ளிபுரம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தின் வழியாக, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று, பொதுப்பணித் துறையினரும், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...