/* */

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்ற கணவன்-மனைவி கைது!

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராய விற்பணையில் ஈடுபட்ட கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்ற கணவன்-மனைவி கைது!
X

கள்ளச்சாராயம் விற்றதாக கைதான கணவன்-மனைவி

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக செங்கல்பட்டு எஸ்.பிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், முள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணவன்-மனைவியான கன்னியப்பன் (37), சுந்தரி (32) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள, 35 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மறைமலை நகரை சேர்ந்த பூச்சி ராஜேந்திரன் என்பவரிடம் கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது, இதையடுத்து, தலைமறைவாக உள்ள பூச்சி ராஜேந்திரனையும் போலீசார் தேடிவருகின்றனர். கள்ளச் சாராயம் விற்ற கணவன் மனைவி இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 Jun 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  3. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  4. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  5. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  7. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  8. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  10. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்