அச்சரப்பாக்கம் ஒன்றியம் 8 வது வார்டில் 5 முனைப் போட்டி

அச்சரப்பாக்கம் ஒன்றியம் 8 வது வார்டில் 5 முனைப் போட்டி
X

அச்சிரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ௮வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் குமார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 9ம் தேதி நடக்கிறது. இதில் 8 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக கே.எஸ் குமார், திமுக சார்பாக சிலம்பரசன், சுயேட்சை வேட்பாளராக பிரேம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பாக அஜித்குமார், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தனசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் சிலம்பரசன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு இணையாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஜித்குமார், பாட்டளி மக்கள் கட்சி வேட்பாளர் தனசேகரன், சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் ஆகியோர் களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture