3 நாட்கள் மட்டும் திருச்சி- பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

3 நாட்கள் மட்டும் திருச்சி- பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக 3 நாட்கள் மட்டும் திருச்சி- பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு ரயில் சேவை குறுகியதாக நிறுத்தப்படும்.

பயணிகளின் வசதிக்காக திருச்சி பாலக்காடு இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுண் ரயில் என அழைக்கப்பட்டு வருகுிறது.

ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் ரயில் ஆகஸ்ட் 11, 17 & 19, ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் (திருப்பூருக்கு அருகில்) குறுகிய நேரம் நிறுத்தப்படும். திருச்சிராப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

ஊத்துக்குளியில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் 17.30 மணிக்கு இயக்கப்படும். ரயில் எண்.16843 இல் உள்ள அதே நிறுத்தங்கள் ரயிலிலும் இருக்கும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story