/* */

ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி. சிங் ஆன்மா வாழ்த்தும் இல்லையேல் மன்னிக்காது என்றார்

HIGHLIGHTS

ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ்  கருத்து
X

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).

ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாள் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 20 ஆம் நாள் தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட போதே அதை நான் வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமது உருவச் சிலை அமைக்கப்படுவதை உணர முடிந்தால் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட 100 மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை, தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தால், வி.பி.சிங் ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

ஒருபுறம் வி.பி. சிங் உருவச்சிலையை திறந்து கொண்டு, இன்னொருபுறம் மாநில அரசின் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று தமிழக அரசு கூறுவது “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும்.

வி.பி. சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிகாரில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டி இருப்பார். அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்.

வி.பி. சிங் குரலைத் தான் நான் ஒலித்துக் கொண்டிருக்கிறேன். சமூக நீதியின் அடிப்படைகளை தமிழக முதலமைச்சர் இப்போதாவது புரிந்து கொண்டு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு வி.பி.சிங் நினைவு நாளை விட சிறந்த தருணம் இருக்க முடியாது.

எனவே, வி.பி.சிங் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், அதற்காக முதலமைச்சரை வி.பி.சிங்கின் ஆன்மா வாழ்த்தும்; இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெருந் துரோகம் செய்தவர்களை மன்னிக்காது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Nov 2023 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது