/* */

உங்கள் மொபைல் போனிலேயே ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு சான்றிதழ்கள்

உங்கள் மொபைல் போனிலேயே ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்.

HIGHLIGHTS

உங்கள் மொபைல் போனிலேயே ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு சான்றிதழ்கள்
X

தமிழகத்தில் ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற மக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் செல்லவேண்டிய சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. இதனை பெற தொழிலாளர்களும் விவசாயிகளும் பெரும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இதனால் சிலர் கடும் சிரமத்திற்கும் உள்ளாகியும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு இந்த சான்றிதழ்களை சுலபமாகப் பெறவும், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, மக்களுக்கு இணக்கமான வெளிப்படைத்தன்மையுடன் சேவைகளை இணையத்தின் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி தங்களின் மொபைல் போனிலிருந்தே ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பித்து பெறலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

உங்களுடைய மொபைல் போனில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# என்ற இணையதள முகவரியில் சென்று Signin -ஐ கிளிக் செய்து உங்களின் விபரங்களை டைப் செய்து Signup கொடுக்க வேண்டும்.

இதனையடுத்து, மீண்டும் Home Page-க்கு சென்று உங்களுடைய user name, password கொடுத்து உள் நுழைய வேண்டும். அல்லது உங்கள் மொபைல் எண் பதிவு செய்து அதில் வரும் ஓடிபி எண் மூலமும் உள் நுழையலாம்.

பின்னர் வரும் திரையில் Services காலத்தில் சென்று Revenue department என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இதில் உங்களுக்கு எந்த விதமான சேவைகள் தேவை என்பதை கிளிக் செய்தால், அதனுள் சேவை கட்டணம், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே உள்ள Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அந்த பக்கத்தில் Applicant CAN Number/ குடிமக்கள் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அங்கேயே குடிமக்கள் கணக்கு எண் பதிவு செய்வதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு சேவைகளுக்கும் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். விண்ணப்பித்த சில நாட்களுக்குள் உங்களுடைய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Updated On: 22 Jan 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’