/* */

வழக்கு விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

வழக்கு விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
X

அமைச்சர் ரகுபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவரை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

''என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் புதுக்கோட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே கடந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை என் மீது உள்ள வழக்குகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.''

''இரண்டு நீதிமன்றத்தால் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.''

மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் உச்சநீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட விழாவில் நான் கலந்து கொண்டது தவறு இல்லை என்றார்.

Updated On: 24 April 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!