/* */

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
X

கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின. கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

நீர் இருப்பு குறைந்ததாக கூறி தண்ணீர் திறப்பை கடந்த 8ம் தேதி கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. எனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதாலும் மழை பற்றாக்குறையாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2023 5:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?