/* */

திருவள்ளுவருக்கு காவி உடை: அண்ணாமலை ட்வீட்

காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

திருவள்ளுவருக்கு காவி உடை: அண்ணாமலை ட்வீட்
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

உழவுக்கு உயிரூட்டும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, சலங்கை, மணிகள் போன்றவை அணிவித்து அலங்கரித்து மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பண்டிகை களை கட்டியிருக்கிறது.

அதேநேரம் ஜனவரி 16 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


அந்தவகையில், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டு பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்." என்று ஒரு பதிவிலும்,

"சிறப்புமிக்க திருவள்ளுவர் தினத்தில் வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்கு தேவையானது, தேவையற்றதை தெளிவாக சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்." என்று மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 17 Jan 2023 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...