பிளான் பண்ணிக்கோங்க: வங்கிகளுக்கு செப்டம்பரில் 12 நாட்கள் விடுமுறை
செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே, வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம். பணம் கட்ட வேண்டிய இடங்களுக்கும் முன்னதாக செலுத்தி விடலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை ஏழு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை.
செப்., 11ம் தேதி, 2வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி,
25ம் தேதி 4வது சனிக்கிழமை.
செப்., 10ம் தேதி - விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
மற்ற மாநிலங்களில்
செப்., 9ம் தேதி - தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
செப்., 17ம் தேதி - கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
செப்., 20ம் தேதி - இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
செப்., 21ம் தேதி - ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu