தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. தனது உரையில், பல்வேறு புதிய அறிவிப்புகளை ஆளுநர் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதலமைச்சர் பதிலுரை நிகழ்த்தவுள்ளார். இத்தகவலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதே நோக்கம். கேள்வி பதில் விவாதம் மற்றும் நன்றியுரை ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu