/* */

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கீரைகார தெருவைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சாவித்திரி(55). இவர்களது மகன் கார்த்திகேயன்(27). இவர் திருமணம் செய்து வைக்க கோரி தினமும் குடிபோதையில் தாய் சாவித்திரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தாய் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறி விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று மதியம் உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது முந்திரி கொல்லையில் கார்த்திகேயன் கைலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் தாய் சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்