/* */

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (19). இவர் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த சில தினங்களாக காதலித்ததாகவும், இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை இளைஞர் திருமணம் செய்ய ஆசை வார்த்தைகள் கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து இளைஞர் மாணவியின் குடும்பத்தை மிரட்டியதாகவும், திருமணம் செய்ய ஒப்புகொள்ள மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் குடும்பத்தார் இதற்கு அஞ்சாததால், சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக செந்தில்குமார் கடத்த முயன்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் செந்தில்குமாரை பிடித்து விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தில் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை கடத்த செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்த, இலையூர் கிராமத்தைச் சேர்ந்த அவரது அக்காள் சித்ரா, இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பூவரசன், செல்வகுமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்